Wednesday, August 25, 2021
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தள்ளிவழங்குவது ஏன்? பகுதி-1
Monday, August 23, 2021
வரி வருவாயில் எங்களது பங்குதான் எவ்வளவு?
இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாடு மக்கள் தங்களுக்கு தேவை ஒரு மாற்றம் என சிந்தித்து தேர்தலில் வாக்களித்தார்கள். திராவிட முன்னேற்ற கழகமும் சிறப்பான வெற்றியை பெற்று ஆட்சியிலும் அமர்ந்தார்கள். பதவியேற்ற நாளில் பெறுந்தொற்று மக்களை மிரட்டிக்கொண்டு முன்னேறியது. அனைத்து முயற்சிகளால் அதை முறியடித்து வெற்றிகண்டது அரசு. அதை தொடர்ந்து மெலும் பல நற்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நற்பெயரினை ஈட்டியுள்ளது.
இவ்வரசின் தேர்தல் அறிக்கையில் அரசுப்பணியாளர்களின் அகவிலைப்படி மற்றும் பழைய ஓய்வு ஊதிய மாற்றம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிக்கைகள் மறுக்கப்படும் நிலை அப்பகுதியினரிடம் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது. அவர்களுடன் இணைந்த ஓய்வூதியர்களின் நிலை கவலை அளிக்கும்படி உள்ளது. தமிழ் நாடு நிதியமைச்சர் அரசின் வருவாயில் ரூபாய் ஒன்றுக்கு, அரசுப்பணியாளர் ஊதியம் மற்றும் இதர செலவினமாக 60பைசா (ரூ1க்கு 60பைசா) எனப்பேட்டியளித்துள்ளார். கடந்த காலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகளும் பேட்டிகளும் வெளியிடப்பட்டுள்ளதை இந்நாடு நன்கறியும்.
அப்படியானால் வாழ்நாள் அனைத்தையும் அரசுக்கும், மக்களுக்குமாக செலவிட்ட அரசுப்பணியாளர், மற்றும் ஓய்வுதியர் ஆகியோருக்கு மக்கள் அளிக்கும் வரியில் என்ன பங்கு என்பதையாவது சொல்லிவிடுங்களேன்.
இப்படிக்கு ஏமாற்றத்துடனும், எதிர்பார்ப்புடனும் உள்ள அரசு பணியாளர்கள்